என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்
தளி அருகே கிராமத்துக்குள் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்
தளி அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகள் விவசாயி நிலங்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்துள்ள தேவரபெட்ட வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
இந்த யானை கூட்டம் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட யானைகள் தேவகானபள்ளி கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்கள் தின்றும் காலால் மிதித்தும் நாசப்படுத்தி அட்டகாசம் செய்தன.
இதில் அனில்குமார், மோட்டப்பா, கிருஷ்ணப்பா, சிக்கன்னாஆச்சாரி, ஆகியோருடைய ராகி, வாழை உள்ளிட்ட பல ஏக்கர் பயிர்கள் நாசமாகின. தொடர்ந்து தேவகானப்பள்ளி விவசாய நிலங்களில் யானைக் கூட்டம் நடமாடிக் கொண்டிருந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் தீவிர முயற்சி எடுத்து யானை கூட்டத்தை வனப்பகுதிகள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து பிண்ணமங்கலம், ஏலேசந்திரம், உனிசேநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






