என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொரோனா வைரஸ்
ஈரோட்டில் 3 மாதத்துக்குப்பின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை வேகம் எடுத்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் தாக்கியது.
இதேபோல் முன்கள பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் அதிக அளவில் பலியாகினர். 2-ம் அலையில் ஒரே நாளில் 1,776 பேருக்கு கொரோனா தொற்று என உச்சம் தொட்டது. அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
கடந்த அக்டோபர் 1-ந்தேதி அன்று 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் அன்றைய தினம் சிகிச்சையில் இருந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அக்டோபர் 2-ந்தேதி முதல் 100-க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து 95 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தினமும் குறைந்து வந்த தொற்று டிசம்பர் 31-ந் தேதி அன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக குறைந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து வந்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 103-ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்துக்குப்பின்பு தொற்று மீண்டும் 100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 711 பேர் இறந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை தினமும் 4500 முதல் 5000 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை 6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
பொதுமக்கள் பெரும்பாலும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. குறிப்பாக முககவசம் அணியும் பழக்கம் குறைந்து உள்ளது. கடைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பெரும்பாலும் முக கவசம் அணிவது இல்லை.
பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை வேகம் எடுத்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் தாக்கியது.
இதேபோல் முன்கள பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் அதிக அளவில் பலியாகினர். 2-ம் அலையில் ஒரே நாளில் 1,776 பேருக்கு கொரோனா தொற்று என உச்சம் தொட்டது. அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
கடந்த அக்டோபர் 1-ந்தேதி அன்று 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் அன்றைய தினம் சிகிச்சையில் இருந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அக்டோபர் 2-ந்தேதி முதல் 100-க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து 95 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தினமும் குறைந்து வந்த தொற்று டிசம்பர் 31-ந் தேதி அன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக குறைந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து வந்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 103-ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்துக்குப்பின்பு தொற்று மீண்டும் 100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 711 பேர் இறந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை தினமும் 4500 முதல் 5000 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை 6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
பொதுமக்கள் பெரும்பாலும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. குறிப்பாக முககவசம் அணியும் பழக்கம் குறைந்து உள்ளது. கடைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பெரும்பாலும் முக கவசம் அணிவது இல்லை.
பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Next Story






