என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்
Byமாலை மலர்7 Jan 2022 9:48 AM GMT (Updated: 7 Jan 2022 9:48 AM GMT)
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நாளை (8-ந் தேதி) நடைபெறுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான சிறப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் நடக்கிறது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் குடும்ப அட்டை பெறாத திருநங்கைகள் விண்ணப்பித்து மின்னணு குடும்ப அட்டை பெறலாம்.
இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X