என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உயிரிழப்பு
பஸ்சில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஓடும் பஸ்சில் இருந்து பிளஸ்-2 மாணவி கீழே குதித்து பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவியாஸ்ரீ (வயது 17). இவர் கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவி நவியாஸ்ரீ, கெலமங்கலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி தனது ஊருக்கு பயணம் செய்தார்.
அப்போது சினிகிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, பதட்டத்துடன் இருக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் மாணவி, ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார்.
இதில் கீழே விழுந்த மாணவி மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயம் அடைந்த மாணவி வலியால் துடித்தார். உடனே சக பயணிகள், கூச்சல் போட்டு பஸ்சை உடனடியாக நிறுத்தினர். பின்னர் மாணவியை மீட்டு, அதே பஸ்சில் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அனுப்பினர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 10 மணியளவில் மாணவி நவியாஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவியாஸ்ரீ (வயது 17). இவர் கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவி நவியாஸ்ரீ, கெலமங்கலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி தனது ஊருக்கு பயணம் செய்தார்.
அப்போது சினிகிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, பதட்டத்துடன் இருக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் மாணவி, ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார்.
இதில் கீழே விழுந்த மாணவி மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயம் அடைந்த மாணவி வலியால் துடித்தார். உடனே சக பயணிகள், கூச்சல் போட்டு பஸ்சை உடனடியாக நிறுத்தினர். பின்னர் மாணவியை மீட்டு, அதே பஸ்சில் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அனுப்பினர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 10 மணியளவில் மாணவி நவியாஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






