என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுமண தம்பதிகளை வாழ்த்தி பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Byமாலை மலர்9 Nov 2021 4:07 AM GMT (Updated: 9 Nov 2021 4:07 AM GMT)
வெள்ள நிவாரண பணிகளுக்கு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து புதுமண மக்களை வாழ்த்தி கனிவுடன் பேசியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.
சென்னை:
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.
தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செய்து வருகிறார்கள். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். நேற்று 2-வது நாளாக புரசைவாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், கண்ணதாசன் நகர் பகுதிகளுக்கு சென்றார். அங்கிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் காரில் மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டார்.
அப்போது பெரம்பூரை சேர்ந்த புதுமண தம்பதிகள் கவுரிசங்கர், மகாலட்சுமி ஆகியோர் மாலையுடன் சாலையோரம் நின்றனர். அவர்களை கண்டதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காரை நிறுத்தி இறங்கினார். பின்னர் அவர்கள் அருகில் சென்று புதுமண தம்பதியை வாழ்தினார். மேலும் அவர்களுக்கு திருமண பரிசும் வழங்கினார். புதுமண தம்பதிகள் கவுரிசங்கர் - மகாலட்சுமி இருவரும் மு.க. ஸ்டாலினிடம் ஆசி பெற்றனர்.
வெள்ள நிவாரண பணிகளுக்கு இடையே முதல்-அமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து புதுமண மக்களை வாழ்த்தி கனிவுடன் பேசியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோரும் உடன் சென்றனர்.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.
தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செய்து வருகிறார்கள். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். நேற்று 2-வது நாளாக புரசைவாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், கண்ணதாசன் நகர் பகுதிகளுக்கு சென்றார். அங்கிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் காரில் மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டார்.
அப்போது பெரம்பூரை சேர்ந்த புதுமண தம்பதிகள் கவுரிசங்கர், மகாலட்சுமி ஆகியோர் மாலையுடன் சாலையோரம் நின்றனர். அவர்களை கண்டதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காரை நிறுத்தி இறங்கினார். பின்னர் அவர்கள் அருகில் சென்று புதுமண தம்பதியை வாழ்தினார். மேலும் அவர்களுக்கு திருமண பரிசும் வழங்கினார். புதுமண தம்பதிகள் கவுரிசங்கர் - மகாலட்சுமி இருவரும் மு.க. ஸ்டாலினிடம் ஆசி பெற்றனர்.
வெள்ள நிவாரண பணிகளுக்கு இடையே முதல்-அமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து புதுமண மக்களை வாழ்த்தி கனிவுடன் பேசியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோரும் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X