என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி பூ- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Byமாலை மலர்26 Oct 2021 4:40 AM GMT (Updated: 26 Oct 2021 4:40 AM GMT)
வனப்பகுதியில் காணப்படுவது போல், இங்கும் பாறைகளின் நடுவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் காண்போரை கண்டு வியக்க வைக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு நாடுகளில் காணப்படும் கள்ளிச்செடிகள், பெரணி செடிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர்.
தற்போது ஊட்டியில் 2-வது சீசன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழகு செடிகள், வண்ண மலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் செடிகளில் 250 வகையான மலர்கள் உள்ளன. இதில் பல லட்சம் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. இது காண்போரை கவரும் வண்ணத்தில் உள்ளது. மேலும் அங்கு பல்வேறு வகையான மலர் செடிகள் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்துள்ளனர். இந்த தொட்டிகளை பார்வையிடுவதற்காக மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
வனப்பகுதியில் காணப்படுவது போல், இங்கும் பாறைகளின் நடுவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் காண்போரை கண்டு வியக்க வைக்கிறது. அசைந்து ஆடும் குறிஞ்சி பூவின் அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த பூவின் மகத்துவம் குறித்து விவரிக்க பூங்கா பயணிகள் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயணிகளுக்கு இதன் தன்மை குறித்து எடுத்துரைக்கின்றனர். குறிஞ்சி மலரை கண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தங்களது செல்போன் மற்றும் கேமிராக்களில் செல்பிக்கள், மற்றும் புகைப்படங்களை எடுத்து நினைவுகளை சேகரித்து செல்கின்றனர். தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு நாடுகளில் காணப்படும் கள்ளிச்செடிகள், பெரணி செடிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர்.
தற்போது ஊட்டியில் 2-வது சீசன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழகு செடிகள், வண்ண மலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் செடிகளில் 250 வகையான மலர்கள் உள்ளன. இதில் பல லட்சம் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. இது காண்போரை கவரும் வண்ணத்தில் உள்ளது. மேலும் அங்கு பல்வேறு வகையான மலர் செடிகள் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்துள்ளனர். இந்த தொட்டிகளை பார்வையிடுவதற்காக மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
வனப்பகுதியில் காணப்படுவது போல், இங்கும் பாறைகளின் நடுவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் காண்போரை கண்டு வியக்க வைக்கிறது. அசைந்து ஆடும் குறிஞ்சி பூவின் அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த பூவின் மகத்துவம் குறித்து விவரிக்க பூங்கா பயணிகள் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயணிகளுக்கு இதன் தன்மை குறித்து எடுத்துரைக்கின்றனர். குறிஞ்சி மலரை கண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தங்களது செல்போன் மற்றும் கேமிராக்களில் செல்பிக்கள், மற்றும் புகைப்படங்களை எடுத்து நினைவுகளை சேகரித்து செல்கின்றனர். தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X