என் மலர்
செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட காட்சி.
ஊட்டி, கொடைக்கானலில் பூங்காக்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்களை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு இன்று பூங்காக்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன.
சுற்றுலா பயணிகளும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் காலை முதலே பூங்காக்களுக்கு வரத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்கள் சுற்றிப்பார்த்து ரசித்தனர். போட்டி, போட்டு அவர்கள் பூங்காக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இன்று பூங்காக்கள் திறக்கப்படுவதை அறிந்து அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். காலையில் விடிந்ததும் பூங்காக்களுக்கு சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பூங்கா நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேன் எந்திரம் மூலம் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் அதிகம் பேர் குவிவதை தடுக்க ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். முதல் நாள் என்பதால் படகு சவாரி செய்ய கூட்டம் குறைவாக இருந்தது. வரும் நாட்களில் படகு சவாரி செய்ய கூட்டம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு பூங்கா மற்றும் படகு இல்லம் இன்று திறந்து செயல்பட்டது. கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்காவும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கொடைக்கானல் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் படகு சவாரி அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர்பாயிண்ட், பேரிஜம், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலாதலங்களும் திறக்கப்பட்டன. பூங்கா மற்றும் ஏரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை மலர்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்களை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு இன்று பூங்காக்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன.
சுற்றுலா பயணிகளும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் காலை முதலே பூங்காக்களுக்கு வரத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்கள் சுற்றிப்பார்த்து ரசித்தனர். போட்டி, போட்டு அவர்கள் பூங்காக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இன்று பூங்காக்கள் திறக்கப்படுவதை அறிந்து அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். காலையில் விடிந்ததும் பூங்காக்களுக்கு சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பூங்கா நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேன் எந்திரம் மூலம் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் அதிகம் பேர் குவிவதை தடுக்க ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். முதல் நாள் என்பதால் படகு சவாரி செய்ய கூட்டம் குறைவாக இருந்தது. வரும் நாட்களில் படகு சவாரி செய்ய கூட்டம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு பூங்கா மற்றும் படகு இல்லம் இன்று திறந்து செயல்பட்டது. கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்காவும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கொடைக்கானல் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் படகு சவாரி அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர்பாயிண்ட், பேரிஜம், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலாதலங்களும் திறக்கப்பட்டன. பூங்கா மற்றும் ஏரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை மலர்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story






