என் மலர்
செய்திகள்

ஈரோடு-மேட்டூர் ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
ஈரோட்டில் இன்று 2-வது வாரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைப்பு
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்படும் 12 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் அனைத்து டீ கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே.வி.ரோடு,
மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகள்.
கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக திறக்க தடை விதிக்கப்பட்டது.
இதன்படி கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து 2-வது வாரமாக இந்த 24 இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்படும் 12 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் அனைத்து டீ கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே.வி.ரோடு,
மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகள்.
கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக திறக்க தடை விதிக்கப்பட்டது.
இதன்படி கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து 2-வது வாரமாக இந்த 24 இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்படும் 12 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
Next Story






