search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை
    X
    டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை

    வேலூரில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறிய 30 பேர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

    வேலூரில் இருந்து கொரோனா நோயாளிகள் 30 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்காக அவை அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 30 பேரின் மாதிரிகள் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறிய சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கிருந்து பெங்களூரில் உள்ள மத்திய சோதனை ஆய்வகத்துக்கு 30 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    ராணிப்பேட்டையில் இதுகுறித்து வேலூர் சுகாதார அதிகாரிகள் கூறுகையில்:-

    வேலூரில் இருந்து கொரோனா நோயாளிகள் 30 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்காக அவை அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் யாருக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×