search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒழலக்கோவில் பகுதியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது
    X
    ஒழலக்கோவில் பகுதியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது

    ஈரோட்டில் மளிகை கடைகள் இன்று முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்

    கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக வியாபாரிகள் தாமாகவே முன்வந்து மளிகை கடை நேரத்தை குறைத்து உள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வந்தது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி அவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையான மளிகை காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் தொற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காய்கறி மளிகை கடை செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் வரும் 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 145-க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மளிகைக்கடைகளின் நேரத்தை குறைத்து இயக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் சார்பில் இன்று முதல் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த சங்கங்களின் கீழ் மொத்தம் 20 ஆயிரம் மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், கோபி போன்ற பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. தொற்றின் தாக்கம் காரணமாக வியாபாரிகள் தாமாகவே முன்வந்து மளிகை கடை நேரத்தை குறைத்து உள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    இதேபோல் மாநகர் பகுதியில் உள்ள 2250 மளிகைக் கடைகள் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருந்தது. 1 மணிக்கு பிறகு அனைத்து மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் அனுமதி கடிதம் அளித்து உள்ளனர்.

    பொதுமக்கள் நலனுக்காகவும், வியாபாரிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சியில் சின்ன செட்டிபாளையம், நல்லகட்டி பாளையம், மலையம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.

    மேலும் இந்த ஒழலக்கோவில் ஊராட்சி திருப்பூர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் திருப்பூர் தொழிற்சாலைகளுக்கும், பின்னலாடை நிறுவனங் களுக்கும் பணிக்கு செல்லும் பணியாளர்கள் ஒழலக் கோவில் ஊராட்சி வழியாக கோபி, நம்பியூர், ஈரோடு, சித்தோடு பகுதிகளுக்குச் சென்று வருவதால் தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.

    இந்நிலையில் ஒழலக்கோவில் பகுதியில் ஊராட்சி சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் வரும் 14-ந் தேதி வரை ஒழலக் கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மருந்து கடைகள் ,பெட்ரோல் பங்க், பால் கொள்முதல் நிலையங்கள் தவிர காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள், வியாபார நிறுவனங்கள், விசைத்தறிக் கூடங்கள், இதர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.

    மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் திருப்பூரில் இருந்து யாரும் வராத வாறு எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு வெளி ஆட்கள் யாரும் வரவேண்டாம் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு படி தற்போது ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×