என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா ஒழிய வேண்டி வீட்டு முன்பு தீ மூட்டி, மஞ்சள் நீர் தெளித்து வழிபாடு
Byமாலை மலர்14 May 2021 4:01 AM GMT (Updated: 14 May 2021 4:01 AM GMT)
நகர் புறங்களில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை விரட்ட பொதுமக்கள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டினர். மேலும் வீடெங்கும் மஞ்சள் நீர் கரைசல் தெளித்து, வீட்டின் வாசற்படியில் வேப்பிலை கட்டி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்:-
படவேடு கிராமத்தில் ஒரு பெண் அருள் வந்து ஆடினார். அப்போது அவர் கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் உடைத்து, தீ மூட்டி, மஞ்சள் நீர் கரைசல் தெளித்து வீட்டின் முன்பு வேப்பிலை தோரணம் கட்டவேண்டும் என்றார்.
இதனால் நாங்கள் வீடுகள் முன்பு நெருப்பு மூட்டி, மஞ்சள்நீர் கரைத்து வழிபட்டோம் என்றனர்.
கொரோனா ஒழிய வேண்டி ஆம்பூரில் நேற்று முன்தினம் வீட்டு முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இந்நிலையில் கண்ணமங்கலத்தில் பெண்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி வழிபட்டுள்ளனர்.
நகர் புறங்களில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை விரட்ட பொதுமக்கள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டினர். மேலும் வீடெங்கும் மஞ்சள் நீர் கரைசல் தெளித்து, வீட்டின் வாசற்படியில் வேப்பிலை கட்டி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்:-
படவேடு கிராமத்தில் ஒரு பெண் அருள் வந்து ஆடினார். அப்போது அவர் கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் உடைத்து, தீ மூட்டி, மஞ்சள் நீர் கரைசல் தெளித்து வீட்டின் முன்பு வேப்பிலை தோரணம் கட்டவேண்டும் என்றார்.
இதனால் நாங்கள் வீடுகள் முன்பு நெருப்பு மூட்டி, மஞ்சள்நீர் கரைத்து வழிபட்டோம் என்றனர்.
கொரோனா ஒழிய வேண்டி ஆம்பூரில் நேற்று முன்தினம் வீட்டு முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இந்நிலையில் கண்ணமங்கலத்தில் பெண்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி வழிபட்டுள்ளனர்.
நகர் புறங்களில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை விரட்ட பொதுமக்கள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X