என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்12 May 2021 11:41 AM GMT (Updated: 12 May 2021 11:41 AM GMT)
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
கடலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கொரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சாகமூரி செயல்பட்டு வருகிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நேற்று அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி முதல் தவணையை அவர் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X