என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகராட்சி ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 91 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்15 April 2021 8:16 AM GMT (Updated: 15 April 2021 8:16 AM GMT)
நகராட்சி ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவப்பூர் கவுராஷ்ட்ரா பெரிய தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவர் நமணசமுத்திரத்தில் வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணவள்ளி. இவர் புதுக்கோட்டை நகராட்சியில் நிதி ஆதார துறையின் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக இவர்களது வீட்டை பூட்டி விட்டு நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இன்று வீடு திரும்பிய பூரண வள்ளி வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது தனி அறையில் பீரோவில் வைக்கப்பட்டி ருந்த 91 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பூர்ண வள்ளி போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நகராட்சி ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை திருவப்பூர் கவுராஷ்ட்ரா பெரிய தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவர் நமணசமுத்திரத்தில் வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணவள்ளி. இவர் புதுக்கோட்டை நகராட்சியில் நிதி ஆதார துறையின் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக இவர்களது வீட்டை பூட்டி விட்டு நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இன்று வீடு திரும்பிய பூரண வள்ளி வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது தனி அறையில் பீரோவில் வைக்கப்பட்டி ருந்த 91 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பூர்ண வள்ளி போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நகராட்சி ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X