என் மலர்
செய்திகள்

வனப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குண்டேரிபள்ளம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கொடுமுடியில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது
கொடுமுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 12.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்சமாக 110 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிமுதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடுமுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 12.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது. கொடுமுடி பகுதியில் மட்டும் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியிலும் 10 செ.மீ. மழை கொட்டியது.
இதேபோல் அந்தியூர், பவானி, நம்பியூர், சென்னிமலை, தாளவாடி, பெருந்துறை, அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
ஈரோடு மாநகர் பகுதியில்இரவு 11 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 12 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இரவு பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் - 104.6
கொடுமுடி - 100.6
ஈரோடு - 70
கவுந்தப்பாடி- 52.2
எலந்தகுட்டைமேடு - 29.4
பவானிசாகர்- 28.2
கொடிவேரி - 12.2
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 924 மில்லி மீட்டர் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்சமாக 110 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிமுதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடுமுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 12.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது. கொடுமுடி பகுதியில் மட்டும் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியிலும் 10 செ.மீ. மழை கொட்டியது.
இதேபோல் அந்தியூர், பவானி, நம்பியூர், சென்னிமலை, தாளவாடி, பெருந்துறை, அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
ஈரோடு மாநகர் பகுதியில்இரவு 11 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 12 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இரவு பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் - 104.6
கொடுமுடி - 100.6
ஈரோடு - 70
கவுந்தப்பாடி- 52.2
எலந்தகுட்டைமேடு - 29.4
பவானிசாகர்- 28.2
கொடிவேரி - 12.2
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 924 மில்லி மீட்டர் மழை பெய்தது.
Next Story






