என் மலர்
செய்திகள்

மழை
கோவை, குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை
கோத்தகிரி, கட்டபெட்டு, கோடநாடு, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை முதல் மிதமாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
அதிகாலை 3 மணி வரை நீடித்த மழையால் குன்னூர் நகரம், வெலிங்டன், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, வண்ணாரபேட்டை, வண்டிசோலை, காட்டேரி, கரன்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் ஊர்ந்தபடியே சென்றன. பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
அதிகாலை வரை இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா பகுதி, தொட்டபெட்டா மலை சிகரம், காந்தல் உள்பட ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் மிதமான மழை பெய்தது. 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கோத்தகிரி, கட்டபெட்டு, கோடநாடு, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை முதல் மிதமாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவையில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், ஜூஸ், தர்பூசணி, நுங்கு, பதநீர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு உஷ்ணத்தை தணித்து வந்தனர். இந்த வெயில் காரணமாக இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் இருந்ததால் மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் முதல் சற்று வெயில் குறைந்து வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் மாநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இன்று அதிகாலை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால், காந்திபுரம், அவினாசி சாலை ராமநாதபுரம் உள்பட அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதிகாலையில் கொட்டி தீர்த்த இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவுகிறது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
அதிகாலை 3 மணி வரை நீடித்த மழையால் குன்னூர் நகரம், வெலிங்டன், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, வண்ணாரபேட்டை, வண்டிசோலை, காட்டேரி, கரன்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் ஊர்ந்தபடியே சென்றன. பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
அதிகாலை வரை இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா பகுதி, தொட்டபெட்டா மலை சிகரம், காந்தல் உள்பட ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் மிதமான மழை பெய்தது. 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கோத்தகிரி, கட்டபெட்டு, கோடநாடு, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை முதல் மிதமாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவையில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், ஜூஸ், தர்பூசணி, நுங்கு, பதநீர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு உஷ்ணத்தை தணித்து வந்தனர். இந்த வெயில் காரணமாக இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் இருந்ததால் மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் முதல் சற்று வெயில் குறைந்து வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் மாநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இன்று அதிகாலை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால், காந்திபுரம், அவினாசி சாலை ராமநாதபுரம் உள்பட அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதிகாலையில் கொட்டி தீர்த்த இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவுகிறது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






