என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் கம்பெனியில் தீ விபத்து
Byமாலை மலர்1 April 2021 6:22 AM GMT (Updated: 1 April 2021 6:22 AM GMT)
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் கம்பெனியில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென விபத்து ஏற்பட்டது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் வெள்ளை சிமெண்ட் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று வேலை முடிந்ததும் ஊழியர்கள் சென்று விட்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் பெருந்துறை நிலைய அதிகாரி ரவிந்திரன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர்.
அப்போது தனியார் நிறுவனம் முழுவதும் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் காலை 8 மணி வரை போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள் மற்றும் பி.வி.சி. பைகள் எரிந்து சேதமானது. சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது தெரியவந்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் வெள்ளை சிமெண்ட் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று வேலை முடிந்ததும் ஊழியர்கள் சென்று விட்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் பெருந்துறை நிலைய அதிகாரி ரவிந்திரன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர்.
அப்போது தனியார் நிறுவனம் முழுவதும் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் காலை 8 மணி வரை போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள் மற்றும் பி.வி.சி. பைகள் எரிந்து சேதமானது. சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X