search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
    X
    கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

    கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ரஜினி மக்கள் மன்றத்தினர்

    தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொரோனா விழிப்புணர்வு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொரோனா விழிப்புணர்வு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் சோளிங்கர் என்.ரவி மேற்பார்வையில் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சோளிங்கர் உள்பட வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா பரவாமல் தடுப்பது குறித்தும், தடுப்பூசி தவறாமல் செலுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

    மூத்த குடிமக்கள் அரசு மருத்துவமனை செலுத்தும் கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.

    வெளியில் செல்லும்போதும், பேசும்போதும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்திய முக கவசங்கள் மற்றும் கைக்குட்டைகளை நன்றாக தூய்மைப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

    தொடர் சளி, காய்ச்சல், ஜலதோ‌ஷம், உடல் சோர்வு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பின் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரை அணுகவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரஜினி அரசியலுக்கு வருவார். ஓட்டு கேட்டு வீடு தோறும் செல்லலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் ரஜினி அரசியலுக்கு வராததால் தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து வருகின்றனர்.

    ரஜினி அரசியலுக்கு வராதது ஏமாற்றத்தை தந்தாலும் கொரோனா விழிப்புணர்வு மனநிறைவை தருவதாக ரஜினி ரசிகர்கள் கூறினர்.
    Next Story
    ×