என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலம் பகுதியில் சூறை காற்றில் முறிந்து விழுந்த வாழைகள்
சத்தியமங்கலம், கோபி பகுதியில் சூறாவளி காற்றில் 30 ஏக்கர் வாழைகள் சேதம்
சத்தியமங்கலம், கோபி பகுதியில் பலத்த சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வருவதுபோல் மேக கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. கோபி, புதுப்பாளையம், கச்சேரி மேடு, சத்தி ரோடு, மொடச்சூர் ரோடு, பாரியூர் ரோடு, பச்சமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த புழுதி காற்று வீசியது.இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பச்சமலை கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டு பறந்தது.
கோபி பகுதியில் புழுதி காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதே போல் கோபியை அடுத்த சிங்கிரிபாளையம் பகுதியில் பலத்த காற்று வீசியது. அந்த பகுதியில் சுந்தரம் என்ற விவசாயி தனது தோட்டத்தில் வாழைகள் பயிரிட்டிருந்தார். வெட்டுவதற்கு தயாராக இருந்த வாழைகள் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்தன.
இதேபோல் சத்திய மங்கலம், கணக்கம் பாளையம், டி.என்.பாளையம், பாரியூர், மோதூர், அரக்கன் கோட்டை, பவானி சாகர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் செவ்வாழை, நேந்திரம் ஆகிய ரகங்களை சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தனர். இந்த வாழைகள் அனைத்தும் வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் அவை அனைத்தும் முறிந்து சேதமானது. இதனால் லட்சக்கணக்கில் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வெட்டுவதற்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, பலத்த சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானது. மரங்கள் அனைத்தும் நன்கு விளைந்து வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் சேதமடைந்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக சாய்ந்த வாழை மரங்களை கணக்கெடுத்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சூறாவளி காற்றின் காரணமாக சத்தியமங்கலம் அத்தாணி மெயின் ரோட்டில் நால் ரோடு பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வருவதுபோல் மேக கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. கோபி, புதுப்பாளையம், கச்சேரி மேடு, சத்தி ரோடு, மொடச்சூர் ரோடு, பாரியூர் ரோடு, பச்சமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த புழுதி காற்று வீசியது.இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பச்சமலை கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டு பறந்தது.
கோபி பகுதியில் புழுதி காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதே போல் கோபியை அடுத்த சிங்கிரிபாளையம் பகுதியில் பலத்த காற்று வீசியது. அந்த பகுதியில் சுந்தரம் என்ற விவசாயி தனது தோட்டத்தில் வாழைகள் பயிரிட்டிருந்தார். வெட்டுவதற்கு தயாராக இருந்த வாழைகள் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்தன.
இதேபோல் சத்திய மங்கலம், கணக்கம் பாளையம், டி.என்.பாளையம், பாரியூர், மோதூர், அரக்கன் கோட்டை, பவானி சாகர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் செவ்வாழை, நேந்திரம் ஆகிய ரகங்களை சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தனர். இந்த வாழைகள் அனைத்தும் வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் அவை அனைத்தும் முறிந்து சேதமானது. இதனால் லட்சக்கணக்கில் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வெட்டுவதற்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, பலத்த சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானது. மரங்கள் அனைத்தும் நன்கு விளைந்து வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் சேதமடைந்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக சாய்ந்த வாழை மரங்களை கணக்கெடுத்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சூறாவளி காற்றின் காரணமாக சத்தியமங்கலம் அத்தாணி மெயின் ரோட்டில் நால் ரோடு பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தன.
Next Story






