search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    விருதுநகரில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம்: சீமான்-7 வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு

    தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சீமான் மீது மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    விருதுநகர்:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு விருதுநகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவர் விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதுதொடர்பாக போலீசார் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் செல்வகுமார்(விருதுநகர்), ஆனந்த ஜோதி(திருச்சுழி), பிரியா (சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி (சாத்தூர்), அபிநயா (ஸ்ரீவில்லிபுத்தூர்), உமா அடைக்கலம் (அருப்புக்கோட்டை) ஆகிய 7 தொகுதி வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் 450 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×