என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் காட்டுத்தீ- வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்
Byமாலை மலர்9 Feb 2021 9:05 AM GMT (Updated: 9 Feb 2021 9:05 AM GMT)
நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் 4 மணி நேரமாக போராடி அணைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இதில் அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி, போன்ற வனவிலங்குகள் வசிப்பிடமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலை பகுதி காய்ந்து போய் இருந்தது.
இந்த நிலையில் நெருஞ்சிப்பேட்டை அருகே உள்ள எதிர்மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீ பற்றியது. தீ காற்றின் வேகத்தாலும் மளமளவென மற்ற பகுதிகளில் பரவி சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு முற்றிலும் தீயை அணைத் தனர். இரவு 7 மணி முதல் 11 மணி வரை சுமார் 4 மணி நேரம் போராடி வனத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இதில் அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி, போன்ற வனவிலங்குகள் வசிப்பிடமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலை பகுதி காய்ந்து போய் இருந்தது.
இந்த நிலையில் நெருஞ்சிப்பேட்டை அருகே உள்ள எதிர்மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீ பற்றியது. தீ காற்றின் வேகத்தாலும் மளமளவென மற்ற பகுதிகளில் பரவி சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு முற்றிலும் தீயை அணைத் தனர். இரவு 7 மணி முதல் 11 மணி வரை சுமார் 4 மணி நேரம் போராடி வனத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X