என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது
Byமாலை மலர்9 Feb 2021 3:11 AM GMT (Updated: 9 Feb 2021 3:11 AM GMT)
அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது, இங்கு அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பேட்டை அருகே எதிர் மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் 30 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது, இங்கு அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பேட்டை அருகே எதிர் மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் 30 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X