search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனப்பகுதியில் காட்டுத்தீ
    X
    வனப்பகுதியில் காட்டுத்தீ

    நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது

    அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது, இங்கு அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகியிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பேட்டை அருகே எதிர் மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் 30 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
    Next Story
    ×