என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்: சாமிநாதன் எம்எல்ஏ உள்பட பாஜக.வினர் மீது வழக்கு
Byமாலை மலர்24 Jan 2021 5:48 AM GMT (Updated: 24 Jan 2021 5:48 AM GMT)
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
கோரிமேடு இந்திராகாந்தி சிலை அருகே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை தீவைத்து கொளுத்தினர்.
இதனை தடுத்த போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. நிர்வாகிகள் அகிலன், நிர்மல் குமார், ஏம்பலம் செல்வம், ரவிச்சந்திரன், சரவணன், தங்க விக்ரமன், கலையரசி, வடிவேலு, விக்கி, பிரபாவதி, ஜெயலட்சுமி, சோமசுந்தரம், செல்வி, தேன்மொழி, புவனேஸ்வரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X