என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி- ஜவாஹிருல்லா
Byமாலை மலர்20 Jan 2021 8:56 AM GMT (Updated: 20 Jan 2021 8:56 AM GMT)
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
கடலூர்:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பாதாக கூறி மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இந்த தேர்தலில் எங்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.
புதுவையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பாதாக கூறி மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இந்த தேர்தலில் எங்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.
புதுவையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X