search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை

    புதுவை கவர்னர் கிரண்பேடி உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் கோவையை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார்.

    தனி உதவியாளரான இவர் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகளை சமூக வலைதளத்தில் பதிவிடும் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் அவர் கோவை சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.

    இதனையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் அவர் தங்கியிருந்த முதலாவது தளத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    கவர்னர் கிரண்பேடி முதலாவது தளத்தில் தங்கியுள்ளார் என்பதால் அவருக்கும் மற்றும் ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை நேற்று மாலை கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது.

    இந்த தகவலை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கவர்னர் மாளிகையில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனா தொற்று வந்ததால் ஏற்கனவே 2 முறை கவர்னர் கிரண்பேடி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

    தற்போது அவரது உதவியாளருக்கே தொற்று உறுதியாகியுள்ளதால் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×