search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 30) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள யூரோ மற்றும் இங்கிலாந்து பவுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அசாருதீனின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×