என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் பயணம்- புதுவை பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Byமாலை மலர்23 Dec 2020 7:14 AM GMT (Updated: 23 Dec 2020 7:14 AM GMT)
கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் பயணம் செய்த புதுவை பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கிருமியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து நாட்டின் விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்திவிட்டன. இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் அருகில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த 30 வயது பெண் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அவருக்கு தொற்று பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பெண்ணை கண்டறிந்து புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர் நலமாக உள்ளதாகவும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இல்லை எனவும், புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இருந்து யார் வந்தாலும் 5 நாட்கள் தனிமைப்படுத்தி 14 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கிருமியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து நாட்டின் விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்திவிட்டன. இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் அருகில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த 30 வயது பெண் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அவருக்கு தொற்று பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பெண்ணை கண்டறிந்து புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர் நலமாக உள்ளதாகவும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இல்லை எனவும், புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இருந்து யார் வந்தாலும் 5 நாட்கள் தனிமைப்படுத்தி 14 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X