என் மலர்
செய்திகள்

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி
ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் 43 சொசைட்டி மூலம் 61 லட்சம் வேட்டிகள், 59.50 லட்சம் சேலை உற்பத்தி செய்யும் பணி நடைபெறுகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி பணிகள் ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சதவீதம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக முதலில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பின்னர் நிலைமை சீராகி இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது. தற்போது, இலவச வேட்டி, சேலை உற்பத்தி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் 43 சொசைட்டி மூலம் 61 லட்சம் வேட்டிகள், 59.50 லட்சம் சேலை உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. தற்போது வரை 48.75 லட்சம் வேட்டியும், 38.91 லட்சம் சேலைகளும் உற்பத்தி நிறைவு பெற்றுள்ளது.
மீதமுள்ள வேட்டி, சேலை உற்பத்தி பணி வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் நிறைவு செய்து அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி பணிகள் ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சதவீதம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக முதலில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பின்னர் நிலைமை சீராகி இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது. தற்போது, இலவச வேட்டி, சேலை உற்பத்தி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் 43 சொசைட்டி மூலம் 61 லட்சம் வேட்டிகள், 59.50 லட்சம் சேலை உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. தற்போது வரை 48.75 லட்சம் வேட்டியும், 38.91 லட்சம் சேலைகளும் உற்பத்தி நிறைவு பெற்றுள்ளது.
மீதமுள்ள வேட்டி, சேலை உற்பத்தி பணி வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் நிறைவு செய்து அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியுள்ளார்.
Next Story






