என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரியில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்29 Nov 2020 3:59 AM GMT (Updated: 29 Nov 2020 3:59 AM GMT)
நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக 20-க்கும் கீழ் தினமும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அரசு தெரிவித்த வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்படுவதால் இதுவரை 7 ஆயிரத்து 154 பேர் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள், பூங்கா பணியாளர்கள், வியாபாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X