search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதலமைச்சர் விளக்கம்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

    * நீலகிரியில் கொரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர்.

    * 6,363 காய்ச்சல் முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.

    * நீலகிரியில் ரூ.447 கோடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

    * நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.

    * மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    * அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×