என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு அருகே பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை
Byமாலை மலர்27 Oct 2020 6:36 AM GMT (Updated: 27 Oct 2020 6:36 AM GMT)
ஈரோடு அருகே பப்ஜி விளையாடிய சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஒரே மகன் அருண் (வயது 14). சென்னை வண்டலூரில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
அருண் எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். நாளடைவில் அருண் இந்த விளையாட்டுக்கு அடிமையானார். இதனால் மன உளைச்சலில் அருண் இருந்துள்ளார். இதிலிருந்து அருணை மீட்டு வெளியே கொண்டுவர அவரது பெற்றோர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கள்ளிபாளையத்தில் உள்ள நண்பரின் தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்து கோயம்புத்தூர் சூலூரில் உள்ள மனநிலை மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக அருணை சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் அருண் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பப்ஜி கேம் விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஒரே மகன் அருண் (வயது 14). சென்னை வண்டலூரில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
அருண் எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். நாளடைவில் அருண் இந்த விளையாட்டுக்கு அடிமையானார். இதனால் மன உளைச்சலில் அருண் இருந்துள்ளார். இதிலிருந்து அருணை மீட்டு வெளியே கொண்டுவர அவரது பெற்றோர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கள்ளிபாளையத்தில் உள்ள நண்பரின் தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்து கோயம்புத்தூர் சூலூரில் உள்ள மனநிலை மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக அருணை சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் அருண் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பப்ஜி கேம் விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X