என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரவீந்திரநாத் எம்.பி. பதவி விலக வேண்டும்- ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி பேட்டி
Byமாலை மலர்5 Oct 2020 12:13 PM GMT (Updated: 5 Oct 2020 12:13 PM GMT)
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசிய ரவீந்திரநாத் எம்.பி. பதவி விலகவேண்டும் என்று ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கலா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தார். மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட உத்தரபிரதேச பா.ஜ.க. அரசின் போலீஸ் துறையை வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதால் அங்கு நடைபெற்று கொண்டு இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை குடியரசு தலைவர் உடனடியாக கலைக்க வேண்டும். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், ‘தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வை சேர்ந்த ரவீந்திரநாத், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதால் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சித்ரா விஸ்வநாதன், வட்டார தலைவர்கள் சாந்தி, சுப்புலட்சுமி, செல்வி, முனீராபேகம், சித்ரா, நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X