என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை- ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்23 Sep 2020 3:55 AM GMT (Updated: 23 Sep 2020 7:22 AM GMT)
நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
ஈரோடு:
எனவே பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், ஆற்றங்கரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் செல்லும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 494 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.53 அடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால், அணை விரைவில் நிரம்பிவிடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.
எனவே பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசபாளையம், அத்தாணி சவுண்டப்பூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி, ஆப்பக்கூடல், சென்னிமலைகவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரிபுதூர், தளவாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், ஆற்றங்கரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் செல்லும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X