என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருஷ்ணகிரியில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    கிருஷ்ணகிரியில் கல்லூரி விடுதியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    தென்காசி மாவட்டம் தேவிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவர் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர் தேவிப்பட்டிணம் கிராமத்தில் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கிருஷ்ணகிரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி ஐஸ்வர்யா நேற்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி பகுதியில் உள்ள மாணவியின் உறவினர் பிரிதீவிராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×