என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொடர்பாக தனிமையில் முடிவுகளை எடுக்கவேண்டாம்- கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தல்
Byமாலை மலர்3 Sep 2020 4:45 AM GMT (Updated: 3 Sep 2020 4:45 AM GMT)
கொரோனா தொடர்பாக தனிமையில் முடிவுகள் எடுக்கவேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பி உள்ளது. இந்த குழு ஐ.சி.எம்.ஆர். மற்றும் ஜிப்மரிலிருந்து வந்து தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாகியுள்ளது. அவர்கள் நமக்கான பணிகளை மதிப்பீடு செய்து நமக்கு வழிகாட்டுவது மற்றும் பயிற்சி அளிக்கிற துறையில் உள்ளனர். கொரோனா சிக்கல்களில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இது அவர்களுடைய வேலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்த குழு தினசரி நேரடியாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார அமைச்சகத்திற்கும் அறிக்கை அளிக்கிறது. எனவே தயவுசெய்து தனிமையில் முடிவுகளை எடுக்கவேண்டாம். மேலும் அத்தகைய செயல்களை புறக்கணிக்கவும், இந்த அறிக்கைகள் அனைவருடைய பார்வைக்கும், பின்னூட்டங்களுக்கும் முன் வைக்கப்படும். அவர்கள் இப்போது தினசரி சுகாதார செயலாளரை சந்தித்து வருவதால் நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையர் அவர்களுடனான அனைத்து சந்திப்புகளும் முறையாக பகிரப்பட வேண்டும். அவர்களைப்பற்றி எந்த ரகசியமும் இல்லை.
கொரோனா கட்டுப்பாட்டு பணி ஒருங்கிணைப்பாளராக அன்பரசு செயல்படுகிறார். அவருக்கு எந்த ஒரு தாமதமும் இல்லாமல் உதவுவதை உறுதி செய்யவேண்டும். கவர்னர் அலுவலகம் உங்களை அனைத்து வகையிலும் பலப்படுத்த முயற்சிக்கிறது. நிலைமையை மறுமதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்திய அரசுக்கும், புதுச்சேரி நிர்வாகத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்கவேண்டும்.
இத்தகைய நெருக்கடியில் வெற்றிக்கான திறவுகோல் என்பது சுய உந்துதல் மற்றும் முன்னோக்கி சிந்திப்பதுதான். உங்கள் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த ஆற்றல், பொறுப்பு இன்றியமையாதது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பி உள்ளது. இந்த குழு ஐ.சி.எம்.ஆர். மற்றும் ஜிப்மரிலிருந்து வந்து தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாகியுள்ளது. அவர்கள் நமக்கான பணிகளை மதிப்பீடு செய்து நமக்கு வழிகாட்டுவது மற்றும் பயிற்சி அளிக்கிற துறையில் உள்ளனர். கொரோனா சிக்கல்களில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இது அவர்களுடைய வேலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்த குழு தினசரி நேரடியாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார அமைச்சகத்திற்கும் அறிக்கை அளிக்கிறது. எனவே தயவுசெய்து தனிமையில் முடிவுகளை எடுக்கவேண்டாம். மேலும் அத்தகைய செயல்களை புறக்கணிக்கவும், இந்த அறிக்கைகள் அனைவருடைய பார்வைக்கும், பின்னூட்டங்களுக்கும் முன் வைக்கப்படும். அவர்கள் இப்போது தினசரி சுகாதார செயலாளரை சந்தித்து வருவதால் நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையர் அவர்களுடனான அனைத்து சந்திப்புகளும் முறையாக பகிரப்பட வேண்டும். அவர்களைப்பற்றி எந்த ரகசியமும் இல்லை.
கொரோனா கட்டுப்பாட்டு பணி ஒருங்கிணைப்பாளராக அன்பரசு செயல்படுகிறார். அவருக்கு எந்த ஒரு தாமதமும் இல்லாமல் உதவுவதை உறுதி செய்யவேண்டும். கவர்னர் அலுவலகம் உங்களை அனைத்து வகையிலும் பலப்படுத்த முயற்சிக்கிறது. நிலைமையை மறுமதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்திய அரசுக்கும், புதுச்சேரி நிர்வாகத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்கவேண்டும்.
இத்தகைய நெருக்கடியில் வெற்றிக்கான திறவுகோல் என்பது சுய உந்துதல் மற்றும் முன்னோக்கி சிந்திப்பதுதான். உங்கள் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த ஆற்றல், பொறுப்பு இன்றியமையாதது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X