என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு- கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
Byமாலை மலர்26 Aug 2020 2:38 AM GMT (Updated: 26 Aug 2020 2:38 AM GMT)
காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை கிராமம் கவரை தெருவில் சாயக்கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவரை விஷவாயு தாக்கியது. அவரை சுனில்குமார் என்பவர் காப்பாற்ற முயன்றார். 2 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். முத்தியால்பேட்டை பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் சாயக்கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய கூறியது யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்தார்.
பின்னர், இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை கிராமம் கவரை தெருவில் சாயக்கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவரை விஷவாயு தாக்கியது. அவரை சுனில்குமார் என்பவர் காப்பாற்ற முயன்றார். 2 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். முத்தியால்பேட்டை பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் சாயக்கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய கூறியது யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்தார்.
பின்னர், இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X