என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஓட்டல் தொழிலாளி கோவில் அறையில் கொன்று புதைப்பு

    பண்ருட்டி அருகே ஓட்டல் தொழிலாளி கோவில் அறையில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடந்த 12ந்தேதி காணாமல் போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

    காணாமல்போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் லிங்காரெட்டிபாளையத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாருக்கு சொந்தமான வேணுகோபால்சுவாமி கோவில் அறையில் புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஓட்டல் தொழிலாளி கோவில் அறையில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×