search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    மின்வினியோகம் தனியார் மயத்துக்கு அரசு எதிர்ப்பு- கோப்பினை கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பினார்

    புதுவை மாநிலத்தில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கான கோப்பினை கவர்னர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் புதுவை அரசு சார்பில், புதுவை மாநிலத்தில் மின்துறை நல்ல முறையில் செயல்படுவது தொடர்பாகவும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நஷ்டம் பெரிய அளவில் இல்லாதது தொடர்பாகவும் மின் துறைக்கு சொந்தமான ரூ.1,200 கோடி சொத்தை தனியார் மயமாக்க முடியாது என தெரிவித்து கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

    இந்த கோப்பின் மீது எந்த முடிவும் எடுக்காமல் கவர்னர் கிரண்பேடி அதை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.
    Next Story
    ×