என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
Byமாலை மலர்7 Aug 2020 9:48 AM GMT (Updated: 7 Aug 2020 9:54 AM GMT)
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சோமு. இவர், மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் ஜெகத்பிரியன் (9). 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று திருப்புட்குழி அருகே உள்ள தாமரைக்குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜெகத்பிரியன், சுதன் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார், குளத்தில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X