search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 213 பேருக்கு கொரோனா உறுதி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 213 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,998 ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 213 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,998 ஆக உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் 6,229 பேர் குணமடைந்துள்ள நிலையில் 117 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×