search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,091 ஆக உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 5,383 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×