என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு
Byமாலை மலர்4 July 2020 12:25 PM GMT (Updated: 4 July 2020 12:25 PM GMT)
சிதம்பரம் அருகே கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அக்கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று மதியம் மீதிகுடி கிராமத்திற்கு வந்து, அங்கு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டறிந்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், தாசில்தார் ஹரிதாஸ், சமூக நல தாசில்தார் பலராமன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா, வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அக்கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று மதியம் மீதிகுடி கிராமத்திற்கு வந்து, அங்கு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டறிந்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், தாசில்தார் ஹரிதாஸ், சமூக நல தாசில்தார் பலராமன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா, வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X