என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி விருப்பம்
Byமாலை மலர்2 July 2020 7:46 AM GMT (Updated: 2 July 2020 7:46 AM GMT)
நாம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தனது உன்னத சேவையின் மூலம் உலகத்தின் அனைத்து மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் கவர்னர் மாளிகை சார்பாக இந்த மருத்துவர் தினத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு வெறும் நன்றி செலுத்துதல் மட்டும் மிகையாகாது.
கடுமையான நிலையில் அவர்கள் தங்களது கடமையை நேரம் பார்க்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நன்றி கூறுதல் மட்டும் போதாது. நண்பர்களே, நாம் அவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வழி என்னவென்றால் நம் உடலை நாமே கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கைகளை சுத்தம் செய்வதின் மூலமும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது நம்மை சுற்றியுள்ளவர் யாருக்கேனும் தொற்று இருந்தால் தெரிவிக்கும்.
நாம் மருத்துவர்களுக்கு செய்யும் மரியாதை என்னவென்றால், சுய நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குதல், சுய சுகாதார பராமரிப்பு, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி, சுய சுகாதாரம் போன்றவையாகும். அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ துணை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ்வொரு தனி மருத்துவர்களுக்கும் இந்த அரசு சான்றிதழை புதுச்சேரி மக்களின் சார்பாக கவர்னர் மாளிகை வழங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தனது உன்னத சேவையின் மூலம் உலகத்தின் அனைத்து மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் கவர்னர் மாளிகை சார்பாக இந்த மருத்துவர் தினத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு வெறும் நன்றி செலுத்துதல் மட்டும் மிகையாகாது.
கடுமையான நிலையில் அவர்கள் தங்களது கடமையை நேரம் பார்க்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நன்றி கூறுதல் மட்டும் போதாது. நண்பர்களே, நாம் அவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வழி என்னவென்றால் நம் உடலை நாமே கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கைகளை சுத்தம் செய்வதின் மூலமும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது நம்மை சுற்றியுள்ளவர் யாருக்கேனும் தொற்று இருந்தால் தெரிவிக்கும்.
நாம் மருத்துவர்களுக்கு செய்யும் மரியாதை என்னவென்றால், சுய நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குதல், சுய சுகாதார பராமரிப்பு, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி, சுய சுகாதாரம் போன்றவையாகும். அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ துணை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ்வொரு தனி மருத்துவர்களுக்கும் இந்த அரசு சான்றிதழை புதுச்சேரி மக்களின் சார்பாக கவர்னர் மாளிகை வழங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X