என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 26 இடங்களில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 26 இடங்களில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வெளியிடங்களுக்கு சென்று வந்தவர்களால் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை மற்றும் எல்லநள்ளி ஆகிய 2 பகுதிகள் தொற்று பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லநள்ளியில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க 6 கிராமங்கள் மூடப்பட்டு உள்ளன. அரசின் அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 10 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த 2 வாரங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட டைகர் ஹில், எட்டின்ஸ் சாலை, காந்தல் இந்திரா காலனி, புட்டுசாமி லைன், கேஷ் பஜார் மற்றும் தூதூர் மட்டம் திலகர் நகர், கோத்தகிரி ராம்சந்த், குன்னூர் அலெக்ஸ்ண்டர் ஹவுஸ், எல்லநள்ளி காமராஜர் நகர் உள்பட 26 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு தொற்று பரவாத வகையில் புதிய தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வெளியிடங்களுக்கு சென்று வந்தவர்களால் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை மற்றும் எல்லநள்ளி ஆகிய 2 பகுதிகள் தொற்று பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லநள்ளியில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க 6 கிராமங்கள் மூடப்பட்டு உள்ளன. அரசின் அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 10 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த 2 வாரங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட டைகர் ஹில், எட்டின்ஸ் சாலை, காந்தல் இந்திரா காலனி, புட்டுசாமி லைன், கேஷ் பஜார் மற்றும் தூதூர் மட்டம் திலகர் நகர், கோத்தகிரி ராம்சந்த், குன்னூர் அலெக்ஸ்ண்டர் ஹவுஸ், எல்லநள்ளி காமராஜர் நகர் உள்பட 26 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு தொற்று பரவாத வகையில் புதிய தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Next Story






