என் மலர்
செய்திகள்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா
அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்- காரைக்கால் கலெக்டர் வேண்டுகோள்
ஊரடங்கு முடியும் வரை அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று காரைக்கால் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டம் முழுவதும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து எல்லைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. சிவப்பு மண்டல பகுதியில் இருந்து இ-பாஸ் வைத்துக்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை அறிக்கையுடன் காரைக்காலுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். வெளியூரில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் குறித்து அந்த பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும்.
சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான தவறான தகவலை பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் போக்குவரத்தால் கொரோனா தொற்று பரவுகிறது என சொல்லப்பட்டாலும், இதுகுறித்து இறுதி முடிவை புதுச்சேரி அரசு தான் எடுக்கும். வேளாண் தொழில் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, நெடுங்காடு மற்றும் திருநள்ளாறு சமுதாய நல மையம், விநாயகா மிஷன் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பிற தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தரக்கூடிய வகையில் சிறப்பு படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. வெண்டிலேட்டர் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் தேவையான அளவு உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க காரைக்கால் அரசு பொது மருத்துவமனைகள் உள்ளன. இது குறித்து பொதுமக்கள் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வகையிலான சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகளின் மருந்துகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா ஊரடங்கு முடியும் வரை முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டம் முழுவதும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து எல்லைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. சிவப்பு மண்டல பகுதியில் இருந்து இ-பாஸ் வைத்துக்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை அறிக்கையுடன் காரைக்காலுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். வெளியூரில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் குறித்து அந்த பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும்.
சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான தவறான தகவலை பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் போக்குவரத்தால் கொரோனா தொற்று பரவுகிறது என சொல்லப்பட்டாலும், இதுகுறித்து இறுதி முடிவை புதுச்சேரி அரசு தான் எடுக்கும். வேளாண் தொழில் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, நெடுங்காடு மற்றும் திருநள்ளாறு சமுதாய நல மையம், விநாயகா மிஷன் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பிற தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தரக்கூடிய வகையில் சிறப்பு படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. வெண்டிலேட்டர் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் தேவையான அளவு உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க காரைக்கால் அரசு பொது மருத்துவமனைகள் உள்ளன. இது குறித்து பொதுமக்கள் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வகையிலான சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகளின் மருந்துகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா ஊரடங்கு முடியும் வரை முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






