என் மலர்
செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்
இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா- சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து
இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது.
கடலூர்:
உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் விழா கடந்த 19ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்நிகழ்வில் கோவில் தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று தேர்த்திருவிழா நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையே கோவில் தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கு தொற்று உறுதியானது.
இதனால் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் இன்று நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக ஏராளமாக காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






