என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்

    புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்றும் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இன்று காலை நிலவரப்படி ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 618ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் பிற ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

    இதனால் முதலமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்றும் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×