என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
ஊரடங்கை மீறி சுற்றுலா வந்த 17 பேர் மீது வழக்கு
நீலகிரிக்கு ஊரடங்கை மீறி சுற்றுலாவுக்கு வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி:
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போலீசார் சோதனை செய்து, சுற்றுலாவுக்காக வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 3 நாட்களில் வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு ஊரடங்கை மீறி சுற்றுலாவுக்கு வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, மாவட்ட எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வு செய்யப்பட்டதால், பலர் உறவினர்களை பார்க்க செல்வதாக கூறி நீலகிரி மாவட்டத்திற்கு வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட எல்லையான பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளூர் முகவரியில் வசித்தால் ஆதார் எண்ணை காண்பித்து வர அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற காரணங்களுக்காக வருகிறவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போலீசார் சோதனை செய்து, சுற்றுலாவுக்காக வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 3 நாட்களில் வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு ஊரடங்கை மீறி சுற்றுலாவுக்கு வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, மாவட்ட எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
Next Story






