என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![எலெக்ட்ரானிக் முகக்கவசம் எலெக்ட்ரானிக் முகக்கவசம்](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005211253003387_Tamil_News_Former-Military-officer-created-electronic-face-mask-to_SECVPF.gif)
X
எலெக்ட்ரானிக் முகக்கவசம்
கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசம்-முன்னாள் ராணுவ அதிகாரி அசத்தல்
By
மாலை மலர்21 May 2020 7:23 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை, முன்னாள் ராணுவ அதிகாரி உருவாக்கி உள்ளார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் வசித்து வருபவர் கர்னல் ராமகிருஷ்ணன். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கனகலாதா, விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை உருவாக்கி உள்ளனர்.
இது ரெஸ்பிரேட்டருடன் கூடிய எலெக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த முகக்கவசத்தை விமானப்படை, ரெயில்வே போன்ற துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கர்னல் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த முகக்கவசத்தை அணிபவர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும். அதே சமயம் கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் அழிக்கப்படும் வகையில் இந்த எலெக்ட்ரானிக் முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அருகில் இருந்தாலும், எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை பயன்படுத்தும்போது தொற்று வராமல் தடுக்க முடியும். முகக்கவசம் ஒன்று உருவாக்க ரூ.4 ஆயிரம் தேவைப்படுகிறது. அதிகளவில் உருவாக்கினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் வசித்து வருபவர் கர்னல் ராமகிருஷ்ணன். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கனகலாதா, விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை உருவாக்கி உள்ளனர்.
இது ரெஸ்பிரேட்டருடன் கூடிய எலெக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த முகக்கவசத்தை விமானப்படை, ரெயில்வே போன்ற துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கர்னல் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த முகக்கவசத்தை அணிபவர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும். அதே சமயம் கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் அழிக்கப்படும் வகையில் இந்த எலெக்ட்ரானிக் முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அருகில் இருந்தாலும், எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை பயன்படுத்தும்போது தொற்று வராமல் தடுக்க முடியும். முகக்கவசம் ஒன்று உருவாக்க ரூ.4 ஆயிரம் தேவைப்படுகிறது. அதிகளவில் உருவாக்கினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)