என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர்- கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்
Byமாலை மலர்10 April 2020 11:50 AM GMT (Updated: 10 April 2020 11:50 AM GMT)
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (37). தனது கனவரை பிரிந்த அமுதா, மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏப்பட்டது. இதனால் அப்துல் அகமது மைதீன் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே அமுதா மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் தனது வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து அப்துல் அகமது மைதீன் சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வீட்டில் வந்து தங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதரத்துறையினர் மற்றும் போலீசார் சென்று வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. வீட்டில் இருந்த அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (37). தனது கனவரை பிரிந்த அமுதா, மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏப்பட்டது. இதனால் அப்துல் அகமது மைதீன் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே அமுதா மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் தனது வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து அப்துல் அகமது மைதீன் சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வீட்டில் வந்து தங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதரத்துறையினர் மற்றும் போலீசார் சென்று வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. வீட்டில் இருந்த அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X