search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அரசு மருத்துவமனை
    X
    கடலூர் அரசு மருத்துவமனை

    கடலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பெண் உயிரிழப்பு

    கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வெளிநாடு சென்று வந்தவர்கள், வெளி மாநிலங்களக்கு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

    இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

    அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவரது ரத்த மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகள் வரவில்லை. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
    Next Story
    ×